சென்னை, அக். 6- வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்று களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதலின்படி, ஒரு பகுதியின் மொத்த நிலப்பரப் பில் 33.3 சத வீதம் பசுமைப் போர் வையுடன் இருக்க வேண்டும்.
அப்படியெனில் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென் னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னையில் 22.70 சதுர கிமீ (வெறும் 5.28 சதவீதம்) அளவே பசுமைப் போர்வை உள்ளது.
இந்நிலையில் விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் கூறியதாவது:
மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க, மாநகராட்சி மயா னங்கள், பூங்காக்கள், திறந்தவெளி நிலங்கள், சாலையோர குளம், ஏரிக்கரை போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடும் போது, இயல்பாகவே சிறப்பாக வளர வாய்ப்புள்ளது. அதனால் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் நாட்டு மரங்களான ஆலமரம், அரச மரம், செண்பக மரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட உள்ளன. மாநகர மண் வகைக்கு ஏற்ற, சாலைகளின் அகலத்துக்கு ஏற்ப உள்ளூர் மர வகைகள் நடப்படும். பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக இலந்தை, நாவல், அத்தி போன்ற பழ மரங்கள் மற்றும் கொடுக்காபுளி மரங்களும் நடப்பட உள்ளன என்று அவர் கூறினார்.