பக்தியால் படுகொலை! அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்

1 Min Read

பெங்களூரு, செப்.17 கருநாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந் தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யசிறீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது. பாக்யசிறீக்கு திருமணமாகி கணவர் மற்றும் 4 மகன்களுடன் வசித்து வந்தார்.

இக்கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு அம்மனுக்கு வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை கோவில் நிர்வாகத்தார் பாக்யசிறீயின் குடும்பத்துக்கு கொடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் பழங்களை பாக்யசிறீ பெற்று வந்தார்.

முதல் மரியாதை

ஆனால் இதற்கு தொண்டு வரகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஊர் பஞ்சாயத்தார் முன்னி லையில் இப்பிரச்சினை குறித்து பஞ்சாயத்து நடந்தது. அப்போது ஊர் பஞ்சாயத்தார் பாக்யசிறீக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். அதாவது கோவிலில் வழங்கப்படும் முதல் மரியாதையும், அம்மனுக்கு படைத்து பூஜிக்கப்படும் தேங்காய்கள் மற்றும் வாழைப் பழங்களும் பாக்யசிறீ குடும்பத் தாருக்கு தான் சொந்தம் என்று கூறினர். இதனால் தொண்டு வரகா ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இப்பிரச் சினைதொடர் பாக தொண்டு வரகாவுக்கும், பாக்யசிறீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தொண்டுவரகா உருட்டு கட்டையால் பாக்யசிறீயின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாக்யசிறீ ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதையடுத்து தொண்டுவரகா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்த ஜோய்டா புறநகர் காவல்துறையினர் விரைந்து வந்து பாக்யசிறீயின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய தொண்டு வரகாவையும் தேடி வருகிறார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *