‘கடவுள் உதவிக்கு வரவில்லையே!’ திபெத்தில் பக்தர்கள் தவிப்பு!

1 Min Read

புதுடில்லி, செப்.11 சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மானச ரோவர் அமைந்துள்ளது. இதனால் அங்கு செல்வதற்கு சீன அரசின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டதால் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த யாத்திரை தொடங்கியது.  மூன்று வழிகளில் செல்ல முடியும்.

இந்நிலையில், சுமார் 750 பக்தர் கள் அரசு முகமைகள் மூலம் கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் காத்மாண்டு வழியாகச் சென் றனர். இந்தச் சூழலில் நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வன்முறையாக மாறி, போர்க்களமாக மாறி உள்ளது.

மானசரோவருக்கு லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்), காத்மாண்டு (நேபாளம்) ஆகிய போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால், மானசரோவர் சென்ற பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் திபெத் தில் தவிக்கின்றனர்.  இவர்கள், ‘தாங்கள் தாயகம் திரும்ப உதவ வேண்டும்’ என ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்குக்  கோரிக்கை வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *