பிஜேபி ஆளும் மாநிலங்களில் குழந்தைகள் மரணம் அதிகம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப். 5- இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சாதனை அளவான 25 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ம.பி., சட்டீஸ்கர், உ.பி.யில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்திய பதிவாளர் ஜெனரலின் 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் வரலாற்று சிறப்பு மிக்கதாக 25 ஆக குறைந்துள்ளது. 2013இல் இந்த விகிதம் 40 ஆக இருந்தது. இந்த அறிக்கை 37.5 % குறைந்ததை பிரதிபலிக்கிறது. ஒரு ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. 2023 அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் ஒவ்வொரு 1000 பிறப்புகளில், 25 குழந்தைகள் இறக்கின்றன. இந்த எண்ணிக்கை 2013இல் 40 ஆக இருந்தது. குழந்தை இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தால், நாட்டில் சுகாதார அணுகல் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகிறது.

2023ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாக கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1971இல் குழந்தை இறப்பு விகிதம் 129 ஆக இருந்த நிலையில் தற்போது 80 % சரிவை கண்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் உபியில் அதிகபட்ச இறப்பு விகிதம் 37 ஆகவும், மிகக் குறைந்த இறப்பு விகிதம் மணிப்பூரில் (3) பதிவாகியுள்ளது. 21 பெரிய மாநிலங்களில் 5 என்ற ஒற்றை இலக்க இறப்பு விகிதத்தை பதிவு செய்த ஒரே மாநிலம் கேரளா ஆகும். இது நாட்டில் மணிப்பூருக்குப் அடுத்த இரண்டாவது இடத்தைப் பிடித்தது.ஆனால் மபி,சட்டீஸ்கர், உபியில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *