விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி இல்லை மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய பிஜேபி அரசு

Viduthalai

புதுடெல்லி, ஜூன்.29- விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நிலத்தடி நீருக்கு வரியா?

விவசாய நோக்கங்களுக்கான நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. சமூகவலைதளங்களிலும் இது பரவியது. இந்த தகவலால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். இதனை எதிர்த்து அரசியல் கட்சியினர் அறிக்கைகள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்த தகவல், வதந்தி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஒன்றிய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து இருந்தார். நீர் பயன்பாடு தொடர்பான விஷயங்கள் மாநில அரசுகளிடம் மட்டுமே உள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

எந்த ஏற்பாடும் இல்லை

இதனைத்தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்வுத் துறையும் விளக்கம் அளித்து  இருக்கிறது. பிரத மரின் கிருஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் செயல் படுத்தி வரும்‘கட்டளைப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையின் நவீனமயமாக்கல்’ திட்டத்தின் மூலம் பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் அழுத்தப்பட்ட குழாய்வழி பாசனங்கள் போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட உள்ளன.

விவசாயிகளின் நீர் பயன்பாட்டுக்கு பயனர் கட்டணங்களை கட்டாயமாக்கு வதற்கு இந்த திட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஒன்றிய அரசு செய்யாது

இந்திய அரசமைப்பின் கீழ் ‘விவசாயம்’ மற்றும் ‘நீர்’ இரண்டும் மாநிலங்களுக்கு உட்பட்டவை என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

எனவே, நீர் பயன்பாட்டு கட்ட ணங்கள் தொடர்பான , எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்பட்டால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அல்லது உள்ளூர் நீர் பயனர் சங்கங்களிடம் இருந்து வர வேண்டும். ஒன்றிய அரசு அதை செய்யாது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *