மேடையில் மூச்சுமூட்ட முழக்கமிடுவதில் மோடி வல்லவர், தீர்வுகளைக் காண்பதில் திறமையற்றவர் ராகுல்காந்தி சாட்டை!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 22 வசனங்கள் பேசுவதில் மட்டுமே பிரதமர் மோடி வல்லவர்; தீர்வு காண்பதில் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதி வில் கூறியதாவது;

சீன இறக்குமதி இரட்டிப்பானது ஏன்?

உள்நாட்டு தயாரிப்பு களை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், இந்தியாவில் அதிக அளவில் தொழிற் சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், இன்று நாட்டில் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையின்மை ஏன் அதிகரித்துள்ளது? சீனா விலிருந்து இறக் குமதிகள் ஏன் இரட்டிப்பாகி யுள்ளன? பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால், தீர்வு காண்பதில் அல்ல.

பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீத மாக குறைந்துள்ளது. அரசு இறக்கு மதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பெருக் குவதில் அல்ல. இறுக்குமதி அதி கரிப்பால் சீனா லாபம் அடைகிறது. நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற் பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

உடல் உழைப்பை நாம் மதிக்கத் தொடங்கும் வரை, தெருக்களில் நின்று மணிக்கணக்காக வேலையும், வியாபாரமும் செய்து வரும் மனிதர் களை நாம் மதிக்க மாட்டோம். மேலும் இதன் மய்யத்தில் ‘ஜாதி’ என்ற கருத்து உள்ளது. இதை நாம் வெளிப்படையாக கூற வேண்டும். இந்திய சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இந்திய சமூகம் எவ்வாறு மரியாதையை பகிர்ந்து கொள்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *