நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 4-  நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மீண்டும் தி.மு.க. ஆட்சி

மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாள் விழா நேற்று (3.6.2025) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, கலைஞர் சிலையை பரிசாக வழங்கினார்கள். பின்னர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கலைஞர் பிறந்த நாளில் என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?

பதில்:- 2026-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமை யும். கலைஞரின் பிறந்த நாள் விழா 102 இடங்களில் கொண் டாடப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடத்தில் விளக்கி கூறும் வகையிலான பிரசாரமும் நடைபெற இருக்கிறது.

கேள்வி:- மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- மாற்றுத்திறனாளிகள் சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது நாங்கள் எதிர்பார்த்ததுதான். சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதுதான் அந்த மசோதா. ஒருவேளை நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றுவிடுவோம் என்று பயந்து அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *