தீ பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 28 கடந்த மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் ‘மெய்தி’ பெரும்பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.  

கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஅய் சிறப்பு புல னாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், ஒன்றிய, மாநில அரசு கள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது. கலவரம் நடந்து வரும் மணிப்பூர் நிலைமை குறித்து ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா, கடந்த 24-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து நேற்று (27.6.2023) நடந்த ஆலோ சனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அமித்ஷா எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இரண்டு நாள்கள் பயணமாக ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல் கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுரா சந்த்பூரில் உள்ள நிவாரண முகாம் களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடுவார். மணிப்பூர் ஏறக்குறைய இரண்டு மாதங் களாக எரிந்து கொண்டிருக்கிறது. 

மேலும் சமூகம் மோதலில் இருந்து அமைதிக்கு நகரும் வகை யில் ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனி தாபிமான செயலுக்கானது. வெறுப் புக்கானது அல்ல, அன்பின் சக்தி யாக இருப்பது நமது பொறுப்பு” என்று அதில் கே.சி.வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *