இரு வேறு மதத்தினர் திருமணம் செய்தால் பதிவு செய்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது தமிழ்நாடு அரசு விளக்கம்

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.24- நடிகர் அமீர், நடிகை பாவ்னி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் செல்லுபடியாகாது என்றும், வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்துகொள்வதற்கு சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது. அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுபோல் நடை பெறும் திருமணங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *