செய்திச்சுருக்கம்

viduthalai
1 Min Read

அ.தி.மு.க. துரோகம் செய்து விட்டது: முதலமைச்சர் விமர்சனம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதே கூட்டணியை திமுக 2 முறை தோற்கடித்திருக்கிறது என்றார். மூன்றாவது முறையாகவும் தோற்கடிப்போம். 2024இல் இரு கட்சிகளும் பிரிந்தது போல நடித்தன. அப்போதே ரகசிய கூட்டு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தேன். இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது என கூறினார்.

கோயில் திருவிழாவில்
கவிழ்ந்த தேர்! 

கருநாடகாவின் முல்கியின் பப்பநாடு பகுதியில் அமைந்துள்ள துர்காபரமேஸ்வரி கோயிலில் 19.4.2025 அன்று  நடைபெற்ற பிரம்மரத உற்சவத்தில், கோயில் தேரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, இதில் யாருக்கும் எந்த சேதமும் நிகழவில்லை. கடந்த மாதம் கூட, 100 அடி தேர் ஒன்று சரிந்தது. இந்த காட்சிப் பதிவு வைரலாக சில நெட்டிசன்கள், தொடர்ந்து கருநாடகாவில் தேர் சரிகிறது.. இது ஏதோ கெட்ட சகுனமாம் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

துரை வைகோ, மல்லை சத்யா கைகளை சேர்த்த வைகோ

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார். அதேபோல், மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா தன்னை கட்சியில் இருந்து நீக்கி கொள்ளலாம் எனக் கூறினார். இதனால் மதிமுகவில் அடுத்தடுத்து குழப்பம் நேரிட்டது. இந்நிலையில் 2 பேரையும் நிர்வாகிகள் சமரசப்படுத்தினர். பின்னர் 2 பேரும் தங்கள் முடிவை திரும்பப் பெற்றனர். 2 பேரின் கைகளையும் வைகோ சேர்த்து வைத்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *