வக்ஃபு சட்டத்தைத் தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறி வைக்கும் பாஜக! – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஏப்.20 வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே குற்றஞ் சாட்டினார். ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி இதே குற்றச்சாட்டை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) மூத்த தலைவரான ஜிதேந்திர அவாதும் முன்வைத்தார்.

சிவசேனை கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடா்பு பிரிவை தொடங்கி வைத்து உத்தவ் தாக்கரே பேசியதாவது: ஹிந்து கோயில் நிலங்கள் உள்பட கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைக்கத் தொடங்கும்.
அவா்களது பெரு நிறுவன நண்பா் களுக்கு இந்த நிலங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. எந்தவொரு சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அன்பில்லை. இதை வெளிப்படையாக காட்டத் தொடங்கி விட்டனா். பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்றார்
மேலும், பாஜகவின் 45-ஆவது நிறுவன நாள் கொண்டாடப்பட்ட நிலையில் பாஜக சிறிதாவது நியாய மாக நடக்க வேண்டும் எனவும் அறிவு றுத்தினார்.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி ஜிதேந்திர அவாத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஒன்றிய அரசுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நிலங்களின் உரிமையாளராக வக்ஃபு வாரியம் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.

அரசு அல்லாத அமைப்புகளில் அதிக நிலங்களை கொண்டதாக இந்திய கத்தோலிக்க தேவாலயம் உள்ளது எனவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே, வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து கிறிஸ்தவா்களின் நிலங்களை பாஜக குறிவைக்கிறது’ என குறிப்பிட்டார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *