வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.6- நாடாளுமன்ற இருஅவை களிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோ தாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வக்பு வாரிய சட் டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அவர் ஒப்புதல் அளிக் கும்பட்சத்தில் அந்த மசோதா சட்டமாகும்.
இந்தநிலையில் இந்த மசோதாவை எதிர்த்து டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், டில்லி வக்பு வாரியத்தின் மேனாள் தலைவருமான அமான துல்லா கான் மற்றும் சிவில் உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அமானதுல்லா கான் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், முஸ்லிம்களின் மத, பண் பாட்டு தன் னாட்சி உரிமையை வக்பு சட்டத்திருத்த மசோதா பறிக்கிறது. மேலும் அரசு நிர்வாகத்தின் தலையீட்டுக்கு வழி வகுத்து, சிறுபான்மையினரின் மத, அறக்கட்டளை நிறு வனங்களை நிர்வகிக்கும் உரிமையை பாதிக்கிறது. முஸ்லிம்களின் மத, பண்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிவில் உரிமை பாது காப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வக்பு சட்டத் திருத்த மசோதா அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது. வக்பு வாரியத்தின் தன்னாட்சி உரிமையை பறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது ஜாவீது, மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமின் (ஏஅய் எம்அய்எம்) கட்சித் தலைவர் அசா துதீன் ஒவைசியும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து உள் ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *