வக்ஃபு திருத்த மசோதா தேசத்திற்கு எதிரானது திருமாவளவன் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி ஏப். 3 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (2.4.2025) வக்ஃபு திருத்த மசோதா விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பேசியதாவது:-

இந்த திருத்த சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த தேசத்துக்கே எதிரானது. இதனை முற்றாக எதிர்க்கிறேன். இந்த சட்டம் இசுலாமியர்களின் சொத்துகளை அபகரிப்பதற்கான முயற்சியாக தெரிகிறது. இசுலாமியர்களின் சொத்துகள் இசுலாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதி ஆகும். ஆனால் இசுலாமியர்கள் அல்லாதவர்களை நிர்வாகக்குழுவில் நியமிக்க இந்த மசோதா வாய்ப்பு வழங்குகிறது. இது எந்த வகையில் நீதி ஆகும். இது ஒரு பாசிச தாக்குதலாக இருக்கிறது. ஏற்ெகனவே குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தீர்கள். இன்று இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்து வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

புத்தகயாவில் இப்படித்தான் புத்த மதத்தினர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக்கி வைத்துள்ளனர். இதை எதிர்த்து புத்த பிட்சுகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கே நகைச்சுவையாக பேசுகிறார். காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளும் ஓட்டுக்காக இசுலாமியர்களை அச்சுறுத்துவதாக நியாயஸ்தர் போல நடித் துக் காட்டுகிறார். இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இந்த மசோதா, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் இதனை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *