மியான்மர், மார்ச் 28 மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உண ரப்பட்டது.