கன்னியாகுமரி, பிப். 16- தந்தை பெரியாருடைய கருத்துகளை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் குமரிமாவட்ட பகுத் தறிவாளர்கழகம் சார்பாக பள்ளி மாண வர்களுக்கான கட்டுரைப்போட்டி தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கம் வீரர் பெரியார்… பெரியாரும் பெண்ணுரிமையும் பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
பள்ளி தலைமை ஆசிரியை லீமா ரோஸி தலைமை தாங்க கழக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.
கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக காப்பாளர் ம.தயாளன், ச.நல்ல பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முதல் பரிசு ராஷ்னி, இரண்டாவது பரிசு பிஸ்மியா, மூன்றாவது பரிசு அக்சயா, அபிநயா ஆகியோர் பெற்றனர்.