மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்.13ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, 6 நகரங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையை பிப். 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.