சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியாரை சிறுமைப்படுத்துவதா? ஏஅய்ஒய்எப் மாநில மாநாடு கண்டனம்!

2 Min Read

சென்னை, ஜன. 30- சமூக சீர்திருத் தப் புரட்சியாளர் பெரியாரை சிறு மைப்படுத்தலுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) தமிழ்நாடு மாநில மாநாடு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.

சலிப்பின்றிப் போராடியவர்
காந்தியாரின் தலைமையை ஏற்று, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் அந்த அமைப் பில் நிலவிய சமூக பாகுபாடுகளை எதிர்த்து வெளியேறி, பொதுவுடைமை சிற்பி சிங்காரவேலரின் தோழமையோடு சுயமரியாதை, சமதர்ம இயக்கம் கண்ட வர். மனித சமூகத்தை பிளவுபடுத்தி உயர்வு, தாழ்வு, புனிதம், தீட்டு போன்ற கற்பனை கருத்தியலை வளர்க்கும் வர்ணாசிரம கட்டமைப்புக்கு எதிராக, வாழ்நாள் முழுவதும் சலிப்பின்றிப் போராடியவர் பெரியார் ஆவார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர் வழங்கிய உலகப் பொதுமறையாம் திருக்குறள் மாநாடு நடத்தி மக்களிடம் எடுத்துச் சென்றவர். மூட நம்பிக்கைகளின் நாற்றங்காலாக விளங்கி வரும் ஸநாதன தர்ம சாஸ்திரங் கள், அதனை நியாயப்படுத்தும் கடவுள் படைப்புகள் என அனைத்தையும் நிராகரித்து, அறிவியல் கருத்துக்கள் அடிப்படையில் பகுத்தறிவு சிந்தனையில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பெரியார், இறை நம்பிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் மீது மாறாத பாசம் காட்டியவர். ஜாதி, சமய மறுப்பை மய்யமாக கொண்டு ஞானசபை அமைத்த வள்ளலார் கருத்துகளை ஆதரித்து வந்தவர். தமிழ்த் தென்றல் திருவிக வுடன் நட்புறவு கொண்டவர்.

வெறிபிடித்துக் கதறுவதா?
ஜாதி, மதங்கள் அண்டா நெருப்பாக வாழ்ந்த பெரியார் தமிழ் சமூகத்தின் தனித்துவப் பண்புகளை முன்னெடுத்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக விடுதலைக்கும் சமரசமின்றி போராடி வந்தவர் . சமூகநீதிப் போராட்டத்தில் சமூக ரீதியான இட ஒதுக்கீடு பெற்று, சாதனை கண்ட இயக்கமாக வாழ்ந் தவர். அந்த மகத்தான சமூக சீர்திருத்தப் போராளியின் புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்துமத வெறிக் கும்பல் அவதூறு குப்பைகளை பெரியார் மீது கொட்டி வருகிறது. இந்த இழிசெயல் கும்பலில் சிலர் கரைந்து போய், வெறி பிடித்து கதறி வருவதை அனைத்திந்திய இளை ஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18ஆவது மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.
பெரியார் முன்னெடுத்துத் தந்த சமுக சீர்திருத்த புரட்சியை முன்னிலும் உறுதியுடன், பரந்துபட்ட முறையில் எடுத்துச் செல்ல, அனைத்துப் பிரிவு இளைஞர்களையும் மாநாடு அறைகூவி அழைக்கிறது என இதன் மாநிலத் தலைவர் த.கு.வெங்கடேசன், மாநில செயலாளர் க.பாரதி ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *