இஸ்ரோ புதிய தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!

1 Min Read

இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக பொறுப் பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்து களைத் தெரிவித்துப் பாராட்டி, மகிழ்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையரின் பிள்ளையாகப் பிறந்த திரு.நாராயணன் அவர்கள், அரசுப் பள்ளியில் படித்து, தனது அறிவாற்றலாலும், கடும் உழைப்பினாலும் இந்தப் பெரு நிலைக்கு வந்துள்ளார்!
அவரது வாழ்வை இன்றைய இளைய மாணவர்கள் ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு உயரவேண்டும் என்பதும், ‘‘தகுதி, திறமை’’ என்பது எந்த ஜாதி வகுப்பினருக்கும் ஏகபோகமானதல்ல என்பதற்கு இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ள திரு.ந.நாராயணன் அவர்களது வாழ்க்கை, மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு பாடம் ஆகும்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
9.1.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *