கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.1.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: ஆணவப் போக்குடன் இருக்கும் ஆளுநரை விரட்டியடிப்போம், கனிமொழி,எம்.பி. ஆவேசம்.
*துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: அரசியல், சட்டப் போராட்டம் நடத்தப்படும்.
* டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்ட பேரணி, மதுரையில் ஆர்ப்பாட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டெல்லி மாநில தேர்தல் பிப்ரவரி 5இல் நடைபெறும்; 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு;

தி இந்து:

* புதிய யுஜிசி வரைவு விதிகள், பல்கலைக்கழகங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் முயற்சி, என மாணவர்கள் அமைப்பு, ஆசிரியர்கள் கண்டனம்.

தி டெலிகிராப்:

* 2024-2025 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.4% வளர்ச்சி அடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது, இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும்.

* துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி வரைவு விதிமுறைகள் கூட்டாட்சி, மாநில உரிமைகள் மீதான தாக்குதல்: எக்ஸ் தளத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கோவில் பூசாரிகளை கொள்ளையடிப்பவர்கள் என பேசியதற்காக கொங்கனி எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தத்தா தாமோதர் நாயக் மீது காவல்துறை வழக்கு. தான் கூறியதை திரும்ப பெற முடியாது என உறுதி.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *