பெரியார், அண்ணா, கலைஞர் பாசறை சார்பில் அய்ம்பெரும் விழா-கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி பங்கேற்பு

1 Min Read

அம்பத்தூர், ஜன. 8- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் கலைஞர் 100, ஆசிரியர் 92, விடுதலை 90, தி.மு.க.75, பாசறை 09 ஆகிய அய்ம்பெரும் விழா பொதுக்கூட்டம் 04-01-2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்பத்தூர் பிரிட்டானியா எதிரில் உள்ள அம்பேத்கர் திடலில் அறிவுமானன் இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி கழக கொடியை ஏற்றி வைத்து மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் தலைமையுரை ஆற்ற ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பா.தென்னரசு, திராவிட மணி (வி.சி.க.), எ.கோபி (காங்.), சு.தேவேந்திரகுமார் (மேனாள் நகர மன்ற உறுப்பினர்), த.வ.லால் (84 வது வட்ட தி.மு.க.செயலாளர்), கு.சங்கர் (அம்.தெ.ப.பொ.தி.மு.க.), மா.வள்ளிமைந்தன் (தி.மு.க.தலைமை கழக பேச்சாளர்), திராவிடர் கழக கழக பேச்சாளர் நர்மதா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, பாசறை தோழர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக கோ.பகலவன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *