தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்ற தடை ஏற்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்டு இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் உருவாக்கிய 31-சி அடிப்படையிலான 69 சதவீத இட ஒதுக்கீடு வரைவு, அன்றைய அதிமுக அரசில், சட்டம் நிறைவேற்றி பின்னர் நாடாளு மன்றத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் ஜூலை 19 (1994).