சென்னை, ஜன. 5- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதலவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முக சீரமைப்பு
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (4.1.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தான்யாவின் தாய் சவு பாக்யாவுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கினார்.
மறுவாழ்வு
தானியங்கி சக்கர நாற்கா லியை வழங்கியதற்காக அனுசுயா மற்றும் அவரது பெற்றோரும் தனக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கியதற்காக சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோரும், முதலமைச்சருக்கு தங்களது நன்றியினை தெரி வித்துக் கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சவுபாக்யா – ஸ்டீபன் இணையரின் மகளான தான்யா முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலையைக் குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் முதலமைச்சர், சிறுமி தான்யா வின் உடல் நிலையினை கருதி அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் சார்பில் வழங்கப்பட்ட 3 சென்ட் வீட்டு மனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டி முடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.