மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (03.01.2025) சென்னை, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 67ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பல் மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் (பொ) முனைவர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சிறீ.பிரேம்குமார், துணை முதல்வர் மரு.சி.சபரிகிரிநாதன் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், பல் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.