வருகிற 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் முனைவா் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

1 Min Read

சென்னை, ஜன.3 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த முழு நேர முனைவா் பட்டப் படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது:

கல்வி ஊக்கத் தொகை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் முழுநேர முனைவா் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் ஆதிதிராவிடா், பழங்குடி யினா் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் முழுநேர முனைவா் பட்டப் படிப்பை புதுப்பிக்கக் கூடியவா்களாக இருப்பா். அவா்கள் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கான திட்ட விதிமுறைகள், மாதிரி விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த தகவல் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள், இயக்குநா், ஆதிதிராவிடா் நல இயக்குநரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *