சென்னை, ஜன.3 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வந்த குழந்தையிடம் தங்கக் கொலுசு திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
தங்க கொலுசு
சென்னை பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (46). இவர் கடந்த மாதம் 13ஆம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார். குடும்பத்தினருடன் அனைவரும் கோவில் வளாகத்தில் அமர்ந்தி ருந்தனர். அப்போது, மகேஷ்குமாரின் குழந்தை யின் காலில் அணிந்திருந்த தங்கக் கொலுசு காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் குமார் உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்தனர். கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த அவரது குழந்தையுடன் பெண் ஒருவர் பேசி, அங்கிருந்த கொலுசை திருடிச் சென்றது தெரியவந்தது.
கைது
அதைத் தொடர்ந்து, திருடிய பெண்ணின் ஒளிப் படங்களைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி (59) என்பது தெரியவந்தது. விசாரணையில், அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து, குடும் பத்துடன் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து, தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் கலைவாணியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு சவரன் தங்கக் கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.