புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. வாட்ஸ் அப் எண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து என வரும் இணைப்புத் தொடர்பு (லிங்க்) மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. கைப்பேசிக்கு வரும் கோப்பைத் திறந்தால் தரவுகள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம் திருட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற இணைப்புத் தொடர்பு (லிங்க்) வந்தால், அதனுள் அழுத்தி (கிளிக்) செய்ய வேண்டாம். மோசடி ஏதும் நடந்தால் cybercrime.gov.in & 1930 எண்ணிப் புகார் பதியலாம்.