வன்முறை – எல்லைமீறும் ஹிந்து மதவாதம்!

1 Min Read

கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய குழந்தைகளை மிரட்டிய குஜராத் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குழந்தைகள் என்ன தவறு செய்தனர்?

இந்தியா

குஜராத் மாநிலம் பாபுநகரில் (காந்தியின் பெயரில் உள்ள நகர்) உள்ள தனியார் பள்ளி ஒன்றில், குழந்தைகளோடு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்
அப்போது உள்ளே நுழைந்த விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர், சாண்டா தாத்தா தொப்பி அணிந்த குழந்தைகளிடமிருந்து அந்தத் தொப்பிகளைப் பிடுங்கி வீசினர்; கிறிஸ்துமஸ் விழாவிற்காக அலங்கரிக்கப்பட்ட அலங்கார விளக்குகளை உடைத்து எறிந்தனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை மிரட்டி, ‘‘நீங்கள் ஹிந்து கலாச்சாரத்தை மதிக்காமல் இருக்கிறீர்கள்; நாங்கள் பலமுறை எச்சரித்தும், மதிக்காமல் இருந்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளோம்‘‘ என்று மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து ஆசிரியர்கள் அச்சப்பட்டு, அந்தப் பள்ளிக்கு வருவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *