கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

31.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்: வள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் துவக்க விழா; 75000 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். உயர் கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் ‘டாப்’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்; பஞ்சாப் – டில்லி சாலை போக்குவரத்து பாதிப்பு.
* நீதிபதிகள் உறவினர்களை நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைப்பதில் உயர்நீதிமன்றத்திற்கு கட்டுப்பாடு விதிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆலோசனை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மந்தமான பொருளாதாரம், கடன்கள் காரணமாக ஏப்ரல்-ஜூன் மாதங்களில் தங்கக் கடன் திரும்ப செலுத்துவதில் சிக்கல்; வாராக்கடன் (NPA) 30% அதிகரித்துள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தின் ராஜ்கோட்டில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட லட்சிய லைட் ஹவுஸ் திட்டம் சிதிலம் அடைந்துள்ளது. ‘சுவர்களில் விரிசல், மேலோடு உரிகிறது…’
* புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை பஜன் லால் அரசாங்கம் ரத்து செய்ததால், ராஜஸ் தானில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது. காங்கிரஸ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 13ஆம் தேதி நடத்திய தேர்வில் வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள் மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரமாக போராட்டம்.
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கு: ‘தொழில்நுட்பக் கோளாறால்’ எப்அய்ஆர் கசிந்ததாக தேசிய தகவல் மய்யம் (என்அய்சி) தெரிவித்துள்ளது
.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *