இந்தியாவிலேயே முதலிடம் ஆதிதிராவிட தொழில் முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம் – பயனாளிகள் 1303 பேர்

Viduthalai
2 Min Read

சென்னை,டிச.29- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023-2024ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது ஆதிதிராவிடர்-பழங் குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான உன்னதமான திட்டம். தொழில் முதலீட்டில் 35 விழுக்காடு தொகையை மானியமாகவும், 65 விழுக்காடு தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது.
இத்திட்டத்தில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 ஆதி திராவிட பயனாளி களுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. தகுதியான வர்களான 1,303 தொழில் முனை வோருக்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இது இந்தியாவிலேயே முதலிடமாகும்.

நகர்ப்புறப் பகுதிகளில்…
ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது, நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம் பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் அய்ந்தாண்டு களில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1687 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1966 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ரூபாய் 100 கோடி வீதம் ரூபாய் 200 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3,082 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியி ருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொல்குடி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வீடற்ற பழங்குடியினருக்கு 750 வீடுகள் ரூ.40.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
மேலும், இந்நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் இணைந்து வீடற்ற பழங்குடியினருக்காகக் கூடுதலாக 3,594 வீடுகள் கட்டப்படவுள்ளன.இப்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தனிக் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலம் சார்ந்து புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் வாழம் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *