பா.ஜ.க. பேணும் ஒழுக்கம்? கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

viduthalai
2 Min Read

லக்னோ, டிச.22 உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராம வாசிக்கு சொந்தமான நிலம் ஒன்றை தன்னிடம் குறைந்த விலைக்கு விற்குமாறு வற்புறுத்திய பில்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷ் சக்யா அவரது ஆட்களுடன் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

அவர் நிலத்தை விற்பதற்கு மறுப்பு தெரிவிக்கவே அந்த நபர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பொய் வழக் குகள் போடுவதாக மிரட்டியுள்ளனர். அடிக் கடி அவரது குடும்பத் தினரை மிரட்டி அச் சுறுத்தல் கொடுத்துள்ளனர்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆட்கள் கிராம வாசியின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தனர். தொடந்து, கடந்த செப். 17 அன்று அந்த நபரின் மனைவியை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கடத்திச் சென்று எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடுமை களால் பெரிதும் பாதிக் கப்பட்ட அந்த நபர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷ் சக்யா, அவ ரது சகோதரர், மரு மகன் மற்றும் சில தொழி லதிபர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது காவல்துறையில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த சட்டமன்ற உறுப்பினர் களுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி லீலு சவுத்ரி இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய டிச. 11 அன்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன் கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வா ளர் மனோஜ் குமார் சிங் விசாரணையை நடத் துவார் என்றும் அதிகாரிகள் தெரிவித் தனர்.

இதுதொடர்பாக சட்டமன்ற உறுப் பினர் தரப்பில் எந்தக் விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *