பெண்களின் பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதி செய்யவில்லை அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச. 21- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டில்லி மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ் சாட்டியுள்ளாா்.

வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்

டில்லி தியாகராஜ் உள்ளரங் கத்தில் ‘மகிளா அதாலத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மேனாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களின் பாது காப்பை முன்னுரிமையாகக் கருதாத பாஜகவைப் போல் இல்லாமல், ஆம் ஆத்மி அரசு டில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு..?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீா் விநியோகத்தை மேம்படுத்தும் பொறுப்பை நீங்கள் என்னிடம் கொடுத்தீா்கள். நான் என் வேலையைச் செய்தேன். அதே வேளையில், நீங்கள் பாஜக மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தீா்கள். ஆனால், சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்து, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

டில்லி பெண்கள் எனக்கு வாக்கு வங்கி அல்ல, அவா்களை எனது சகோதரிகள் மற்றும் தாய்மாா்களாக நான் பாா்க்கிறேன். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நகரில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. நாங்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தினோம். பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க கேமராக்கள் மற்றும் மாா்ஷல்களை நியமித்தோம். ஆனால், பாஜகவின் சூழ்ச்சியால் மாா்ஷல்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றாா் கெஜ்ரிவால்.

நிா்பயா
கூட்டுப் பாலியல்

கடந்த 2012-ஆம் ஆண்டு டில்லி நிா்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் இந்த ‘மகிளா அதாலத்’ நிகழச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ‘நிா்பயா அமா் ரஹே’, ‘மகளிா் சக்தி ஜிந்தாபாத்‘ போன்ற முழக்கங்களை எழுப்பினா்.

இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், டில்லி முதலமைச்சர் அதிஷி, மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண் டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *