அயோத்தியில் மசூதி கட்ட வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் பிஜேபி பிரமுகர் கோரிக்கை

1 Min Read

புதுடில்லி, டிச.19- அயோத் தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என உ.பி. முதலமைச்சருக்கு பாஜக மூத்த தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி, உ.பி. அரசு அயோத்தியின் தன்னிபூரில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்கொள்வதற்காக இந்தோ-இசுலாமிக் கலாச்சார அறக்கட்டளையை சன்னி மத்திய வக்பு வாரியம் நிறுவியது.

திரும்பப் பெற நடிவடிக்கை

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ரஜ்னீஷ் சிங் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் அல்ல. மாறாக மசூதி என்ற போர்வையில் குழப்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

எனவே, மசூதி கட்ட வழங்கிய நிலத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *