கோவை, டிச. 19- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.12.2024 அன்று மாலை 6.00 மணிக்கு காமராஜர் நகர் ,கண்ணப்பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநகரத் தலைவர் தி.க செந்தில்நாதன், மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி, ப.க மாவட்ட தலைவர் பெ.சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, ப.க மாவட்ட செயலாளர் அக்ரி நாகராஜ், தி.தொ. மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், தெற்கு பகுதி தலைவர் தெ.குமரேசன், வடக்கு பகுதி செயலாளர் ச.திராவிட மணி, மாவட்ட இளைஞரணி செயலா ளர் சா.ராசா, ஆட்டோ சக்தி, குறிச்சி குரு, ஆவின் சுப்பையா, இருதயராஜ், ஆகியோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் த.செ.மதியரசு நன்றியுரை கூறினார்.
தீர்மானம்:
26.12.2024 அன்று கோவை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கும் இக்கூட்டம் பாராட் டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
டிசம்பர் 26 அன்று கோவையில் நடைபெறும் வைக்கம் வெற்றி முழக்கம் – தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிப்பு- திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.