அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப. முத்துக்குமரன் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மு.பெ.சாமிநாதன் தமிழ் நாடு அரசின் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டர், ப.முத்துக் குமரன் (வயது 94) அவர்களை, மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் தோழர்கள் சந்தித்து ஆடை போர்த்தி கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர், வருகை தந்து வாழ்த்திய, மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், காப்பாளர்.சு.மணிவண்ணன், செந்துறை சா.இரா சேந்திரன், மதியழகன் ஆகியோருக்கு முத்துக்குமரன் கழக நூல்கள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். (25.02.2024)
‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு வாழ்த்து
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:தமிழ்ச் செம்மல்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
