மகத்தான மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை

Viduthalai
1 Min Read

ஈரோடு, ஜூலை 22 – ஈரோடு அருகே உள்ள முத்தம் பாளையத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விபத் தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இத னால் அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர். 

இதைத்தொடர்ந்து பெருந்துறை அரசு மருத் துவ கல்லூரி மருத்துவ மனை உயர் மருத்துவ குழுவினர், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண் கள் ஆகியவற்றை பாது காப்பாக எடுத்து சென்னை, கோவை, சேலம், ஈரோட் டில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மூளைச்சாவு அடைந்தவரின் உட லுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முதல் வர் டாக்டர் வள்ளி சத் தியமூர்த்தி மற்றும் மருத் துவமனை மருத்துவர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். 

மூளைச்சாவு அடைந்த வரின் உடலில் இருந்து உறுப்புகளை பாதுகாப்புடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்படுவது 2ஆ-வது முறை என்பது குறிப்பி டத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *