கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் இன்று (23.7.2023) பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சிறப்புடன் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடங்கி வைத்து உரையாற்றினார். கிராம பிராச்சார அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன், கழகக் காப்பாளர் ம.சுப்பராயன், மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராஜன், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன் ஆகியோர் உடனிருந்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயற்சிப் பட்டறையை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
52 மாணவர்களுடன் கள்ளக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books