52 மாணவர்களுடன் கள்ளக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

Viduthalai
1 Min Read

அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் இன்று (23.7.2023) பெரியாரியல் பயிற்சிப்பட்டறை  சிறப்புடன் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  கிராம பிராச்சார அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன், கழகக் காப்பாளர் ம.சுப்பராயன், மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராஜன், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன் ஆகியோர் உடனிருந்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயற்சிப் பட்டறையை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *