குடியேற்றம், டிச. 9- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்கான சிறப்பு புற்றுநோய் கண்டறிதல் முகாம் 1-12-2024 ஞாயிற்றுக்கிழமை, கலை 10.00 மணிக்கு, குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன் பாபு தொடக்க உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் இம் முகாமில் நோக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், மாவட்ட மகளிர் அணி ந.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரி தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம், நகர கழக தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம், நகர கழக அமைப்பாளர் வி. மோகன் மற்றும் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் ம.கோட்டீஸ்வரன், பகுத்தறிவாளர் கழகம் க.அய்யாவேலு ஆகியோர் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா. ராஜகுமாரி, மாவட்ட செயலாளர் பெ. இந்திரா காந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.லதா, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா, மகளிர் பாசறை அமைப்பாளர் மருத்துவர் தி.அனிதா, மகளிர் பாசறை ச.சோபியா ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்புரையாற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
குடியேற்றம் அரசு மருத்துவமனையின் தலைமை குடிமுறை மருத்துவர் ம.மாறன்பாபு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார். குடியேற்றம் அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.சர்மிலி, மருத்துவர் எஸ்.சுதாகர்,செவிலியர் எம்.சத்யா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துக்கொண்ட பொது மக்களுக்கு காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பு நோய்கள் மற்றும் மகளிருக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தார்கள்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பகுத்தறிவாளர் கழக தன்னார்வலர்கள் பா.ஆகாஷ், அ.அஜித், சோ.திவாகரன், கு.ரிஷி, கி.சிவக்குமார், ச.ஜிஷ்ணுகுமார் ,ச.பிரசாந்த் ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் பி.தனபால் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளராக தோழர்.க.பரமசிவம் அவர்களையும், குடியேற்றம் பகுத்தறிவாளர் கழக நகர செயலாளராக தோழர் ம.கோட்டீஸ்வரன் அவர்களையும் புதிய நிர்வாகிகளாக நியமித்து தீர்மானம் இயற்றப்பட்டது.