ஆண்டுகள் அய்ம்பதுக்கு
அப்பாலும் அய்ந்தைத்
தாண்டியும் அய்யாவுடன்
தவறாமல் தொடர்ந்தே
தூண்டிடும் உணர்வுகளால்
துவளாது நிற்கின்றேன்
வேண்டியத் தோழர்கள்
விடைபெற்றுச் சென்றாலும்
அய்யாவாம் ஆசிரியரின்
அடிதொடர்ந்து மகிழ்வுடனே
பொய்யாக வாழாமல்
பொலிவுடனே சிறக்கின்றோம்
மெய்யான அவர்வாழ்வே
மெலிவினத்தின் ஊன்றுகோலாம்
எய்திடுமோ என்றவற்றை
எளிதிலேப் பெறவைத்தார்
தந்தை பெரியாரின்
தாக்கத்தை கருத்தை
தரணி எங்கும்
பரவச் செய்தே
திராவிடக் கொள்கைக்கு
திசையெங்கும் வரவேற்பை
திரண்டிடச் செய்தவரை
திசைநோக்கி வணங்குகிறோம்
தொண்ணூற்று இரண்டினைத்
தொடுகின்ற நிலையிலும்
என்றுமே போலவரும்
எழுச்சிமிகு தெளிவுடன்
இருபத்தொன் பதெனவே
இருப்பதோ நமக்கு
அருமருந்தாய் கிடைக்கின்ற
அய்யாவை வாழ்த்துகிறோம்
– பி.பட்டாபிராமன், காப்பாளர்
திருவண்ணாமலை