பெரியார் புத்தக நிலைய அரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி

1 Min Read

அரசியல்

ஒசூர், ஜூலை 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்12ஆம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு (14.07.2023) வருகை தந்த உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக் கரபாணி அவர்கள் புத்தகத் திரு விழாவில் அமைந்துள்ள (கடை எண் 65) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தககடையை திறந்து வைத்தார். 

முதல் விற்பனையை ஒசூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ் ணகிரி மேற்கு மாவட்ட திமுக செய லாளருமான ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாநகர மேயரும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூர் சாராட்சியர் சரண்யா,மாநகர ஆணையர் சினேகா, திமுக விவ சாயி அணி மாநில துணைச் செய லாளர் கெலமங்கலம் அரியப்பன், ஒசூர் மாநகராட்சி சுகாதரகுழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வ ரன், திராவிடர் கழக மகளிரணி செய லாளர் கோ.கண்மணி, வழக்குரை ஞர் க.கா.வெற்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *