பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2023 அறிவியல் கண்காட்சி!

1 Min Read

அரசியல்

திருச்சி, ஜூலை 24- திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2023 மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 22.7.2023 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்குப் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் முதல்வர். டாக்டர். க.வனிதா தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். இந்த அறிவியல் கண்காட்சியில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 53 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. 

அரசியல்

இதில் இளநிலை மற்றும் முது நிலைப் பிரிவுகளில் ஆறு முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 600 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த அறிவியல் கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாண வர்களுக்கு இளநிலை மற்றும் முது நிலை அளவுகளில் வெற்றிக் கோப்பை களும் பாராட்டுச் சான்றிதழ்களும் பள்ளி முதல்வரால் வழங் கப்பட்டன. நிகழ்ச்சியில் அய்மான் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி யின் பேராசிரியர்கள் நடுவர்களாகப் பங் கேற்றுச் சிறப்பிடம் பிடித்த மாண வர்களைத் தேர்வு செய்தனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணி தோழர்கள் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *