நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன. பெட்ரோல் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரில் 28.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 8.30% அதிகரித்து 31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் விற்பனை 5.90% உயர்ந்து, 72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது அக்டோபரின் 65 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 11% உயர்ந்துள்ளது.