ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவிகள் வளையப்பந்து போட்டியில் வெற்றி

viduthalai
1 Min Read

ஜெயங்கொண்டம், டிச.2- பள்ளிக்கல்வி துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி விளாங்குடி உயர்நிலைப் பள்ளியில் 25.11.2024 அன்று நடைபெற்றது.
அதில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், டி.பழூர், செந்துறை, அரியலூர், திருமானூர் ஆகிய ஆறு குறு வட்டத்தில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் உள்ள மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் அட்சயா இரண்டாம் இடமும், இரட்டையர் பிரிவில் அட்சயா மற்றும் சுருதி ஆகியோர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரஞ்சனி மற்றும் ஆர்.ரவிசங்கர் ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *