இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் கைது!

Viduthalai
1 Min Read

ராமேசுவரம்,ஜூலை 25 –  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று (25.7.2023) அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் வேலு, நாகநாதன்(எ)தட்சிண மூர்த்தி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகில் இருந்த  9 மீனவர்களை கைது செய்தனர். 

 மண்டபம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *