பனகல் அரசர் யார் தெரியுமா, ‘துக்ளக்கே’!

1 Min Read

மற்றவை

கேள்வி: ‘பனகல் அரசர் வழி நடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்’ என்று ஸ்டாலின் உறுதி கூறுகிறாரே?

பதில்: 1922 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர், கும்பகோணத்தைச் சேர்ந்த டி.சதாசிவ ஐயரை ஹிந்து சமய அற நிலையத் துறையின் தலைவராக நியமித்தார்(1). அவர் வழியை பின்பற்றும் ஸ்டாலின் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த ஐயரை நியமிக்கப் போகிறார்?

(1) https://en.wikipedia.org/wiki/T._Sada siva_Iyaer#cite_ref-satyamurtip53_6&0.

‘துக்ளக்’ 2.8.2023, பக்கம் 9 

மற்றவை

‘துக்ளக்’ கும்பலுக்கு எப்பொழுதுமே தங்களவாள் பற்றியே சதா நினைப்பு! அதே பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் தான் தனியார் கொள்ளையடித்த கோவில்களை எல்லாம் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தார் என்பதும், மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை யைத் தூக்கி எறிந்தார் என்பதும் குருமூர்த்தி அய்யர் கும்பலுக்குத் தெரியுமா?

அரசு தேர்வாணையம், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குழு அமைத்தது, இப்படி பார்ப்பன ஆதிக்கத்தை நறுக்கினார் பனகல் அரசர் என்பதையும் குருமூர்த்திகள் தெரிந்துகொள்ளட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *