திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகராட்சியின் 60ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ், பெரியார் தொடக்கப்பள்ளி செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். பள்ளியில் பயிலும் பல்வேறு செயல்பாடுகளில் உள்ள மாணவியர்கள் மிகுந்த கரவொலியுடன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். இந்நிகழ்விற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு பள்ளி செயலர் வீ.அன்புராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, மிதிவண்டிகளை பெற்ற மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அரசுத் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என அறிவுரை வழங்கினார். (திருச்சி, 25.11.2024)