கென்யா, அமெரிக்காவைத் தொடர்ந்து வங்கதேச அரசு அதானிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு அதானி நிறுவனத்துடன் மின்சக்தி துறை சார்ந்த ஒப்பந்தங்கள் செய்திருந்தது. அவை சட்ட விதிகளுக்கு மாறாக இருப்பதாக யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்த விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது. அத்துடன், கூடுதல் விசாரணைக்கு பன்னாட்டுப் புலனாய்வு அதிகாரிகளை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
கருப்பு மையால் “அரிசன்”
பெயரை அழித்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் அன்பில் மகேஷிடம் “அரிசன் காலனி” என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று மல்லசமுத்திரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர், கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்ற நோக்கில் அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, ‘மல்லசமுத்திரம் கிழக்கு’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்தார்.