ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.7.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* நாடாளுமன்றம் மூன்று நாட்களாக முடக்கம். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பேச வேண்டும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

* நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. 

* மணிப்பூர் பிரச்சினை காரணமாக  நாடாளுமன்ற முடக்கம் தொடரும் நிலை உள்ளது என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுப் பாடத்திட்டம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ம.பி.யில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது மனிதக் கழிவுகளை பூசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை

தி டெலிகிராப்:

* மணிப்பூர் உள்நாட்டுப் போரின் நடுவே உள்ளது, ஆனால் பிரதமர் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன் வலி யுறுத்தி யுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *