பொங்கல் நாளில் சி.ஏ..தேர்வு நடத்துவதா? எதிர்ப்பு வலுக்கிறது!

1 Min Read

சென்னை, நவ. 25- இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், சி.ஏ. தேர்வை நடத்துவது தமிழ்நாட்டில் இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தனது ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் விழா அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் முடிவு. நமது அடையாளம், பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்.

-இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறப்பினர் சு.வெங்கடேசன் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அய்.சி.ஏ.அய். நிறுவன தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *