தடையை மீறிய ஒன்றிய அமைச்சர் கைது

1 Min Read

மேற்குவங்கத்தில் தடையை மீறி பதற்றமான பகுதிக்கு செல்ல முயன்ற ஒன்றிய பாஜக அமைச்சர் சுகந்தா மஜூம்தாரை காவல்துறையினர் கைது செய்தனர். பெல்டாங் காவில் அண்மையில் இரு குழுக்களிடையே விளம்பரப் பலகை தொடர்பாக மோதல் மூண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறி செல்ல முயன்ற மஜூம்தாரை காவல்துறை கைது செய்தது.

ஆசிரியர் அறிக்கை
உலகைச் சுற்றி…

• அய்ரோப்பிய யூனியன் – லத்தீன் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரான்ஸ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
• பாகிஸ்தானின் மாலிகேலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
• நட்புறவின் அடையாளமாக வடகொரியாவுக்கு ஆப்பிரிக்க சிங்கத்தை ரஷ்யா பரிசளித்துள்ளது.
• எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பால் தொடர்ந்து 4ஆவது மாதமாக ஜப்பான் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *