சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா (7-11-2024) 9-11-2024 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் தே.குணாபாரதி, சி.பொன்னுரங்கம், பூ.இராமலிங்கம், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், ஜெயந்தி சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் அறிவு வழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன், வை.கலையரசன், கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, புஷ்பா, அருள் விழியன், அரிஷ், சிவகுமார்,சீதா, அரவிந்தன், கோ.பகலவன், திராவிட யாழன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக சிவகுமார் நன்றி கூறினார்.